ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் உறுப்புரிமை அதிரடியாக நீக்கம் : கட்சி செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய செயற்படாமை - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் உறுப்புரிமை அதிரடியாக நீக்கம் : கட்சி செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய செயற்படாமை

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நியமிக்கும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய செயற்படாத காரணத்தினால் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர்களில் 6 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

01. ஹேரத் முதியன்சலே சுசில் ஹேரத்

02. அதிகாரீனாயக முதியன்சேலாகே பெனபொடே கெதர அனில் இந்ரஜித் தசநாயக்க

03. கரதகொல்லே வலவ்வே தனஞ்சய சம்பத் கரதகொல்ல

04. அலுத் கெதர பிரியரஞ்சன குமார ரத்நாயக்க

05. ஹேரத் முதியன்சேலாகே குசுமா குமாரி

06. கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன

மேற்படி, நபர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment