முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணி புரிந்த பணிப் பெண் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்கியதன் ஊடாக சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்திவரும் விசாரணைளுக்கு அமையவே, அந்த பெண் கைது செய்யப்பட்டதாக மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த ராஜபக்ஷ சுபசிங்க பத்திரனகே நிபுனி கிருஷ்ணஜினா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என ஆனைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment