ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பலி கொண்ட விபத்து : சாரதி, மனைவி, தந்தை, மாமியார் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பலி கொண்ட விபத்து : சாரதி, மனைவி, தந்தை, மாமியார் பலி

காலி, ரத்கம பகுதியில் ரில்லம்ப புகையிரத கடவையில் மாத்தறை - வவுனியா புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர்.

இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தின் போது, குறித்த முச்சக்கர வண்டியில் அதன் சாரதி, சாரதியின் தந்தை மற்றும் மனைவி, மனைவியின் தாய் ஆகியோர் பயணித்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து, குறித்த 4 பேரும் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதியின் மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் 46, 47, 84 வயதுடைய வெல்லபட, பூஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலங்கள் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment