நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அண்மையில் செயலிழந்து சேவை பழுதுபார்ப்பை தொடர்ந்து, 270 MW மின்வலுவை விநியோகிக்கும் குறித்த மின் பிறப்பாக்கி நேற்றைய தினம் (31) தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. ஆயினும் குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்த போதிலும் நாட்டில் திட்டமிட்ட மின்வெட்டுக்கு அவசியமில்லை என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment