யாழில் வீடுகளுக்குள் புகுந்து வாள் வெட்டு வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

யாழில் வீடுகளுக்குள் புகுந்து வாள் வெட்டு வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கைது

யாழ். கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளில், இரு வேறு வீடுகளுக்குள் புகுந்து வாள் வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர் .

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வாள் வெட்டு வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment