செய்தித்தாள்களை அச்சிடும் காகிதங்களுக்கு பெரும் தட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

செய்தித்தாள்களை அச்சிடும் காகிதங்களுக்கு பெரும் தட்டுப்பாடு

நாட்டில் தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஒரு தொன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன், பத்திரிகை தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment