திறந்து வைக்கப்பட்டது மரினா பொதுமக்கள் நடைபாதை : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்தலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

திறந்து வைக்கப்பட்டது மரினா பொதுமக்கள் நடைபாதை : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்தலாம்

கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட மரினா பொதுமக்கள் நடைபாதை மற்றும் படகு முற்றம் ஆகியவை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கலாம் .

நாளை முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

No comments:

Post a Comment