இரசாயன கலப்பற்ற உணவுகளை வழங்குவதே அரசின் நோக்கம் : சேதன பசளைகளை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை! - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

இரசாயன கலப்பற்ற உணவுகளை வழங்குவதே அரசின் நோக்கம் : சேதன பசளைகளை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் வகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தேவையான இயற்கை உரங்களை உடனடியாக பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தனர்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment