அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி மீள திறக்கப்படுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (22) நடைபெற்ற COVID ஒழிப்பு விசேட கூட்டத்தின் போது இதற்கான பரிந்துரை கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, உரிய வழிகாட்டல்கள் அந்தந்த பாடசாலைகளின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கும் குறைவானவர்கள் கற்கும் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

No comments:

Post a Comment