பொருளாதார ரீதியில் நாட்டை பலவீனப்படுத்தவே எதிர்தரப்பினர் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறு வலியுறுத்துகிறார்கள் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

பொருளாதார ரீதியில் நாட்டை பலவீனப்படுத்தவே எதிர்தரப்பினர் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறு வலியுறுத்துகிறார்கள் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் நாட்டை பலவீனப்படுத்துவதற்காகவே எதிர்தரப்பினர் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறு வலியுறுத்துகிறார்கள் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பூகோள மட்டத்தில் எழுந்துள்ள பெருந்தொற்று சவாலை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள வேளை எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது வெறுக்கத்தக்கது.

நாட்டை தொடர்ந்து முடக்குவதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக நிதி செலவிடப்படுகிறது. வருமானம் ஈட்டும் வழிமுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பூகோள மட்டத்திலான பெருந்தொற்று சவாலை அரசாங்கம் எதிர்க் கொண்டுள்ள நிலையில் எதிர்தரப்பினரும், அவர்களுக்கு சார்பான தொழிற்சங்கத்தினரும் குறுகிய நோக்கத்திற்காக செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றார்.

No comments:

Post a Comment