ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2021 ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளுக்கான கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதில் 27 நாட்களில் மொத்தமாக 31 போட்டிகள் நடைபெறும்.
கொவிட்-19 தொற்று நோயைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஒத்தி வைக்கப்பட்ட 14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான பிளாக்பஸ்டர் மோதலுடன் செப்டம்பர் 19 ஆம் திகதி துபாயில் மீண்டும் தொடங்கும்.
எஞ்சிய 31 போட்டிகளில் 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் சார்ஜாவிலும், 08 ஆட்டங்கள் அபுதாபியிலும் நடைபெறும்.
சூப்பர் லீக் சுற்றின் இறுதி ஆட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே துபாயில் நடைபெறும்.
அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 துபாயில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment