இந்தியாவில் ஏப்ரலுக்கு பின்னர் ஒரே நாளில் குறைந்த உயிரிழப்புகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

இந்தியாவில் ஏப்ரலுக்கு பின்னர் ஒரே நாளில் குறைந்த உயிரிழப்புகள்

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் இந்தியாவில் குறைந்த அளவிலான கொவிட்-19 தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி நேற்று கொவிட் தொற்றால் 817 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 45,951 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பல நல அமைச்சகம் இன்று புதன்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அது மாத்திரமன்றி இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் குறைவான உயிரழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment