சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்ட பிரதேசம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காணாமல் போகியுள்ள மூவரையும் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் குறித்த பகுதியிலுள்ள மக்களையும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment