தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் - தப்போவ நீர்த் தேக்கத்தின் 6 வான் கதவுகளும், குருணாகல் தெதுறுஓயா நீர்த் தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே குறித்த நீர்த் தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment