மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான முஹம்மத் நஷீட் மீதான குண்டுத் தாக்குதல் அவரது அபார துணிச்சலை ஒருபோதும் குன்றச் செய்யாது. அவ்வாறே தாராள ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காகப் போராடிவந்த மாலைதீவு மக்களின் மன உணர்வுகளையும் மழுங்கடித்து விடாது. அவர் துரிதமாக குணமடையப் பிரார்த்திப்பதோடு, வெளி வரக்கூடிய புலனாய்வுத் தகவல்கள் அதன் சூத்திரதாரிகளைத் தோலுரித்துக் காட்டும் என நம்புகிறோம்.

சபாநாயகர் நஷீட் உடனான பிந்திய சந்திப்பு எமது பிராந்தியத்தில் முளைவிட்டுப் பரவிவரும் தீவிரவாதம் மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்பவற்றின் சீர்கேடான போக்கை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஒன்றின் அவசியத்தை உணரும் தருணம் வந்துவிட்டது.

வழமையான ஐ.எஸ்.ஐ.எஸ். கண்ணாடி ஊடாக மட்டும் இவற்றை நோக்குவதை விடுத்து, வேறுபட்ட எல்லைகளுக்கும், எஜமானர்களுக்கும் ஏற்றவாறு உருமாறும் விசித்திரமான கொரோனா வைரஸின் வீரியத்தையும், வீச்சையும் பார்ப்பதைப் போன்று இவற்றையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

No comments:

Post a Comment