கொரோனா தொற்று நிலைமையினால் உப தபால் அலுவலகங்களை திறக்கும் காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.
இதேவேளை, சனிக்கிழமைகளில் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.
No comments:
Post a Comment