உப தபால் அலுவலகங்களின் சேவை நேரத்தில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

உப தபால் அலுவலகங்களின் சேவை நேரத்தில் மாற்றம்

கொரோனா தொற்று நிலைமையினால் உப தபால் அலுவலகங்களை திறக்கும் காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.

இதேவேளை, சனிக்கிழமைகளில் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறியுள்ளார்.

No comments:

Post a Comment