இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
இன்றைய (25) ஐந்தாவதும் இறுதி நாளான ஆட்டத்தை 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்கள் எனும் வலுவான நிலையில் ஆரம்பித்த இலங்கை அணி, முதலாவது விக்கெட்டாக 166 ஓட்டங்களை பெற்றிருந்த தனஞ்சய டி சில்வாவை பறிகொடுத்த (535/4) நிலையில், அடுத்து 244 ஓட்டங்களை குவித்திருந்த திமுத் கருணாரத்னவை இழந்தது (544/5). இந்த இரு விக்கெட்டுகளையும் தஸ்கின் இஸ்லாம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
107 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நிலையில், இன்று பிற்பகல் அளவில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தேநீர் இடைவேளையின் போது, மழையின் குறுக்கீட்டால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவானார்.
No comments:
Post a Comment