நேற்றையதினம் இலங்கையில் 357 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என கொவிட் வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 70 ஆகும்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 63 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 41 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 18 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 11 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலிருந்து தலா 15 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்திலிருந்து 50 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 13 பேர் மற்றும் மாத்தறை, மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலிருந்து தலா 2 தொற்றாளர்கள் வீதமும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கேகாலை, பதுளை, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா ஒரு தொற்றார் வீதமும் பதிவாகியுள்ளதாக கொவிட் வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், புத்தளம் மாவட்டத்திலிருந்து 30 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 8 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 4 பேரும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தலா 3 தொற்றாளர்கள் வீதமும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment