யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் காலை முதல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்புடையவர்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத்துறை கோரியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் அவருடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நீதிமன்றங்களில் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வார காலமாக (மார்ச் 16ஆம் திகதிக்குப் பின்னர்) தொடர்புடையவர்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுள்ளது.
அவ்வாறு தொடர்புடையவர்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியுடன் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அடையாளப்படுத்துமாறு சுகாதாரத் துறை கேட்டுள்ளது.
சம்மந்தப்பட்டவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதன் ஊடாக தமது உறவினர்களையும் பிரதேசத்தையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது
No comments:
Post a Comment