தொழிலாளர்களின் நிலைமை அரசாங்கத்திற்கு புரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

தொழிலாளர்களின் நிலைமை அரசாங்கத்திற்கு புரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? - காவிந்த ஜயவர்தன

(செ.தேன்மொழி)

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இந்நாட்டு தொழிலாளர்கள், இன்று தொழில் எதுவும் இன்றி பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு அங்கு போதிய உணவு, நீர், மருத்துவம் என்பன கிடைப்பதில்லை. இவர்களது நிலைமைத் தொடர்பில் அரசாங்கத்திற்கு புரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேலும் கூறியதாவது, பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு தாய்மார்களை அழைத்து வருவதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்திடம் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால், வரிப் பணத்தை அல்லது வெளிநாட்டுக்கு உழைக்கு மக்களின் நிதியத்தை பயன்படுத்தியாவது அவர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment