வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றார் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றார் திருமதி ஸோபா ஜெயரஞ்சித்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச் சேர்ந்த திருமதி ஸோபா ஜெயரஞ்சித் மீண்டும் இன்று திங்கட்கிழமை பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருமதி ஸோபா ஜெயரஞ்சித் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகக் கடமையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 08.01.2021ம் திகதியன்று கிழக்கு மாகாண ஆளுனரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச சபை உட்பட 14 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு தங்களது பணிகளைச் செய்வதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 27.01.2021ம் திகதியன்று வெளியிடப்பட்ட வரத்தமானியின் அடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மீண்டும் தவிசாளராக திருமதி ஸோபா ஜெயரஞ்சித் மத அனுஸ்டானங்களுடன் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பௌத்த, இந்து, இஸ்லாமிய மதப்பெரியார்களின் ஆசிர்வாதங்களுடன் தனது கடமையினை தவிசாளர் ஆரம்பித்த நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்குடாத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment