யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல - அமைச்சர் சரத் வீரசேகர

(நா.தனுஜா)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனியொரு சமூகத்தின் சொத்து அல்ல என்று கூறியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 

அப்பதிவில் 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது தனியொரு சமூகத்தின் பிரத்தியேக களமோ அல்லது சொத்தோ அல்ல. இது ஒருமித்த இலங்கையின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டதாகும்' என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூருவது என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை நினைவு கூருவதற்கும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கக்கூடாது என்றும் சரத் வீரசேகர வலியுறுத்தியிருக்கிறார்.

No comments:

Post a Comment