நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி நகர சபை தவிசாளர் கையொப்பமிட்டு முடக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளை தான் விடுவிப்பதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது நகைப்புக்குரிய விடயம். கொவிட்-19 சட்டத்தின் கீழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மட்டும் அதிகாரம் கொண்டது அவருக்குரிய அந்த அதிகாரத்தின் கீழ் அவரின் கீழ் உள்ள எவரும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ. லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர் அழகையா லதாகரன் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட்-19 சட்டத்தின் கடைசி முடிவானது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மாத்திரமே வழங்கப்பட முடியும். எங்களுக்கு கூட அந்த அதிகாரம் இல்லை. நாங்கள் அவருக்கு எங்களுடைய சிபாரிசை வழங்குவோம். அது தொடர்பாக அவர் எங்களுடன் தொடர்பு கொண்டு பின்னர் அவர் தன்னுடைய அறிவித்தலை தேசிய கொவிட்-19 செயலணிக்கு அனுப்பி வைப்பார் அதன் பின்னர் அவர்கள் அதனை அறிப்பார்கள் இதுதான் வழிமுறை. ஆகவே இந்த கடிதம் சட்டத்துக்கு முரனானது.
இருந்தபோதும் ஒரு பகுதியை நாங்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அதனுடைய பாதிப்பு மக்களுக்கு. எனவே எங்களுக்கும் விருப்பம் மிக விரைவில் ஒரு பகுதியை விடுவிக்க வேண்டும் என்று அதனை விடுவிப்பதற்கான உரிய ஆதாரத்தை உரிய வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்பட்டு இன்னும் நான்கு நாட்களில் தீர்மானம் எடுப்போம்.
இந்த பகுதிக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடந்த 3 தினங்கள் சென்று பரிசோதனையில் ஈடுபட்டதுடன், சுமார் 70 ஆயிரம் சனத் தொகை கொண்ட பிரதேசத்தில் நாங்கள் எதிர்பார்த்தது குறைந்தது ஒரு நாளிற்கு 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படும் என ஆனால் ஒரு நாளில் 50 அல்லது 60 க்குமேல் அன்டிஜன் பிரிசோதனைகள் இடம்பெறவில்லை.
சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரதேசத்தில் கடந்த வாரம் 8 கிராம சேவகர் பிரிவுகளை விடுவித்துள்ளோம். இதன் தாக்கம் முற்று முழுதாக நீங்கவில்லை அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பது தான் எங்களது முக்கியமான குறிக்கோள்.
அதனடிப்படையில் நாங்கள் சுகாதார நாயகத்துடன் கலந்துரையாடி வரும் 3 நாட்கள் விசேடமாக இரு அணிகளை அனுப்பி அங்கு மொத்தமாக 800 க்கு மேற்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் வருகின்ற முடிவுகளின் பிரகாரம்தான் நாங்கள் உண்மையான நிலமையைக் காண முடியும்.
அதன் பின்னர்தான் அந்த பகுதிகளை விடுவிப்பதா அல்லது தொற்று காணப்படும் பகுதியை மட்டும் விட்டு மற்றப் பகுதியை விடுவிப்பதா என நான்கு நாட்களில் முடிவு எடுக்கப்படும். எங்களுடைய சேவையானது ஒரே நாடு என்ற வகையில் எல்லோருக்கும் சமனாக சேவைகளை செய்ய வேண்டும் அதேவேளை மூத்த பிரைஜைகளை பாதுகாக்க வேண்டும் என்று செயற்படுகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment