ஜப்பான் பாராளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.
ஜப்பானின் மிகவும் சக்தி வாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நோய்த் தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை உள்ளூர் அரசாங்கங்கள் ஏற்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நாட்டு மக்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை பெற முடியும் என்று ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா உறுதியளித்துள்ளார்.
இது நாட்டின் மோசமான தொற்று நோயுடன் போராடுகையில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய திட்டத்தை வழங்குகிறது என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது
தடுப்பூசிகளிலிருந்து உருவாகும் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் தனியார் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க இந்த பிரேரணை அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் அரசு மாடர்னா இன்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது, மேலும் அஸ்ட்ரா ஜெனேகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் ஆகியவற்றுடன் அடிப்படை ஒப்பந்தங்களையும் செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஜப்பானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment