(நா.தனுஜா)
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல் போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இழப்பீட்டுக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுவந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் அந்தக் கொடுப்பனவு முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே வரையறுக்கப்பட்ட சில குடும்பங்களே அந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டிருந்தன. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment