என்.டி.பி. வங்கியின் ஊழியருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

என்.டி.பி. வங்கியின் ஊழியருக்கு கொரோனா!

என்.டி.பி. (NDB) வங்கியின் கொழும்பு 04 இல் அமைந்துள்ள (மரைன் டிரைவ்) கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது. 

என்.டி.பி. வங்கியின் குறித்த கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கியின் ஊழியர் ஒருவருக்க கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஊழியர் மினுவாங்கொடையில் வசிப்பவர் எனவும் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, வங்கியின் செயற்பாடுகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிக் கிளை வளாகத்தில் கிருமித் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment