தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களில் நாளை தொடக்கம் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 18 பிரதேசங்களில் நாளைய தினம் தொடக்கம் 3 தினங்களுக்கு வர்த்தக நிலையங்களைத் திறப்பது மற்றும் மருந்தகங்களை திறப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கம்பஹா பொலிஸ் வலையத்திற்குள் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையில் திறந்திருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த பிரதேசங்களில் மூன்று நாட்களுக்கு முழுமையாக பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதை வரையறுப்பதற்காக மீண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 18 பிரதேசங்களில் நளைய தினம் தொடக்கம் மூன்று நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை திறத்தல் மற்றும் மருந்தகங்களை திறத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக செவ்வாய், புதன் மற்றும் வியாழன் அகிய மூன்று தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும். இதன் பின்னர் இது தொடர்பான நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த பிரதேசங்களின் ஊடாக வாகனங்கள் பயணிக்க முடியும். இருப்பினும் இந்த பிரதேசத்தில் பயணிகளை வாகனங்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நோயாளர்களை கண்டுபிடித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை பரீட்சாத்திகளுக்கு இதனால் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment