பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு கொரோனா!

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பொலிஸ் அதிகாரி பேலலியாகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். 

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment