பல்வேறு ரயில் மார்க்கங்களில் 16 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 ஊரடங்கு சட்டத்தின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவிக்கும் வரையில் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கை ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க புத்தளம் ரயில் மார்க்கத்தினூடான நாளாந்த 8 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
களனி ரயில் மார்க்கத்தில் இரண்டு நாளாந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இரத்து செய்யப்பட்ட இரயில் சேவைகளின் விபரம் பின்வருமாறு
No comments:
Post a Comment