(செ.தேன்மொழி)
பொதுத் தேர்தர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முடிவெடுத்திருந்தால் மேன் முறையீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமை மற்றும் ஜூன் 20 பொதுத் தேல்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துறைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனாலே நாங்கள் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தோம்.
தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கமைய ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருந்தால், இன்று உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
தற்போது எமது வேண்டுக்கோளுக்கேற்ற வகையில் இம்மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட இருந்த பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா நெருக்கடி கட்டுபாட்டுக்குள் வந்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பாதுகாப்பான சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்காக நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment