ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும் - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும் - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனநாயகத்துக்கான தங்கள் போராட்டம் தொடரும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி, பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்படாது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் தொடர்பில் பிரதான வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி என்ற ரீதியில், தீர்ப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மனுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபங்களை நிராகரிக்கவும், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை தெரியவில்லை. விபரமான தீர்ப்பு கிடைத்த பின்னரேயே காரணங்கள் தொடர்பில் ஆராயலாம்.

எது எப்படியோ நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை நாம் ஏற்கின்றோம். ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்' என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment