ஹட்டனில் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 8 பேர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

ஹட்டனில் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 8 பேர்

ஹட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் நேற்றிரவு முதல் (31.03.2014) 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

அம்பகமுவ சுகாதார வைத்திய பிரிவின், பொது சுகாதார பரிசோதகர்களாலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 29 ஆம் திகதி அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஹட்டனிலுள்ள வர்த்தகர் ஒருவரும், அவரது சாரதியும் நீர்கொழும்பு சென்று வந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக நீர்கொழும்பு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாலேயே, பாதுகாப்பு கருதி அங்கு சென்றவர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஹட்டன் ஹிஜ்ராபுர பகுதியைச் சேர்ந்த வர்த்தகரினதும் (ஆறு உறுப்பினர்கள்) அவரது சாரதியினதும் (இருவர்) குடும்பங்களே இவ்வாறு தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

சாரதி கொழும்பு சென்றதால் அவரின் இரு பிள்ளைகளும் சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனவே, இரு தரப்புகளில் இருந்தும் மொத்தமாக 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment