கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுறை - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுறை - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடற்றொழில்சார் போக்குவரத்துக்களை மேற்கொள்வோரும் கடல்சார் உற்பத்திகளின் வியாபாரிகளும் தங்கள் பிரதேசங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரை அணுகி, அவர்களின் சிபாரிசு கடிதத்தினைப் பெற்று அதனை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து போக்குவரத்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக கடற்றொழில் சமூகத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment