எலிசபெத் மகாராணி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் ! - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

எலிசபெத் மகாராணி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் !

இரண்டாம் எலிசபெத் மாகாராணி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக பாக்கிங்ஹாம் அரண்மனை வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியனதையடுத்தே மகாராணியின் உடல் நலத்தை உறுதிப்படுத்தி பாக்கிங்ஹாம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

மாகாராணி இறுதியாக மார்ச் 11 ஆம் திகதி பிரதமரை சந்தித்ததாகவும் மேலும், அவரது உடல் நலன் குறித்து அனைத்து ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும் பாக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த வார ஆரம்பத்தில் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது. 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புதல்வரும், இங்கிலாந்து சிம்மாசனத்தின் வாரிசுமான இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது ஸ்காட்லாந்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment