பேக்கரி உணவுகளை தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

பேக்கரி உணவுகளை தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

(இரா.செல்வராஜா) 

தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்களின் உணவுத் தேவையின் ஒரு பகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

கட்டுப்பாட்டு விலையில், சுகாதார முறையில் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளை கிராமங்களுக்கும், தோட்டங்களுக்கு விநியோகிக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நாட்டிலுள்ள சகல பேக்கரிகளையும் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment