கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, April 10, 2019

demo-image

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

04
எஸ்.எம்.எம்.முர்ஷித் 
ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம் 08.04.2019ம் திகதி திங்கட்கிழமை முதல் 12.04.2019ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் நேற்று 09.04.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டையினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சேவை இடம்பெற்றது.

இதில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.அல் அமீன், வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, எஸ்.தையூப், பொலிஸ் உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் பிரதி, பிறப்புப்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
01
06
03
05
02
07

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *