கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வாவிக்கரையில் சிரமதானப்பணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வாவிக்கரையில் சிரமதானப்பணி

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம் கடந்த 08.04.2019ம் திகதி திங்கட்கிழமை முதல் 12.04.2019ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாலத்தினை அண்டியுள்ள வாவிக்கரையைத் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் நேற்று 08.04.2019ம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஜகத் குமார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கார், செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.தட்சாயினி யசோகாந் உட்பட சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது ஓட்டமாவடிப் பாலத்தினை அண்டியுள்ள வாவிக்கரையை ஓட்டமாவடி பிரதேச சபையின் சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment