“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு - News View

About Us

Add+Banner

Wednesday, April 10, 2019

demo-image

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் போதைப் பொருளுக்கு எதிரான கருத்தரங்கு

01+%25281%2529
எஸ்.எம்.எம்.முர்ஷித் 
ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம் 08.04.2019ம் திகதி திங்கட்கிழமை முதல் 12.04.2019ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நிகழ்வில் போதைப்பொருளுக்கெதிரான கருத்தரங்கு செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 09.04.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருளுக்கெதிரான கருத்தரங்கில் வளவாளராக ஜனாதிபதி விசேட செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளருமான தெ.உதயரூபன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மட், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
01+%25287%2529
01+%25285%2529
01+%25283%2529
01+%25284%2529
01+%25282%2529

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *