நாட்டில் மின்சார கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு : நாளை முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 11, 2025

நாட்டில் மின்சார கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு : நாளை முதல் அமுல்

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுப் பயன்பாட்டு கட்டண ஒப்பீடு
மதத் தலங்கள், அறக்கட்டளை நிறுவனங்களின் கட்டண பட்டியல் ஒப்பீடு
தொழில்துறை, ஹோட்டல், பொது உபயோக வாடிக்கையாளர்களின் சராசரி பயன்பாடு ஒப்பீடு

No comments:

Post a Comment