பேராதனை - கண்டி ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 10, 2025

பேராதனை - கண்டி ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென  குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால்  கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment