தரமற்ற முறுக்குக் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கஹதுடுவ பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மேற்படி முறுக்குக் கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக மேற்படி அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து மேற்படி தொழிற்சாலையை முற்றுகை இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பின் தொடர்ந்து அந்தக் களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர்.
அங்கு சுமார் 400 தொன் முருக்கு கம்பிகள் களஞ்சியசாலையில் காணப்பட்டுள்ளதுடன் அதன் பொருட்களின் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அந்த தொழிற்சாலையின் முற்றுகை தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை மூலம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment