அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசிம் தலைமையில் நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சரினால் பாடசாலை நிலவும் குறைபாடுகள், தேவைகள், கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த தேவையான விடயங்கள் போன்றவற்றை கேட்டறிந்துகொண்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்அப்துல் ஜலீல், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எம்.றசீம், நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜீத், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.அன்ஸார், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment