எரிகாயங்களுடன் 3 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு - மஞ்சந்தொடுவாயில் சம்பவம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, January 4, 2019

demo-image

எரிகாயங்களுடன் 3 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு - மஞ்சந்தொடுவாயில் சம்பவம்

Women%2527s-Dead-Body-Found-File
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னா வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதான, திருமதி சித்தி றசீனா இக்பால் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என, பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம், எரி காயங்களுடன், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக
பொலிசார் குறிப்பிட்டனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *