மீராவோடை வாராந்த பொதுச் சந்தை தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஆசிரியர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

மீராவோடை வாராந்த பொதுச் சந்தை தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஆசிரியர்

மீராவோடை வாராந்த பொதுச் சந்தையை நிறுத்துவதற்குகாக நான் கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக மீராவோடையைச் சேர்ந்த அல்அஸ்ஹர் நிஜாம்தீன் (Alashar Nijamdeen) எனும் சகோதரர் அவருடைய முகநூலில் பதிவு ஒன்றினை எதுவிதமான உண்மைத் தன்மையும் தெரியாமல் உண்மைக்கு புறம்பாக பதிவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சபையில் எவ்வாறான விடயம் பேசப்பட்டது என்றும், அதற்கான ஓடியோ, வீடியோ ஆதாரங்கள் அன்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களிடம் கேட்டறிந்து கொண்டால் இதன் உண்மைத் தண்மையினை பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இச்சசோதரர் மிகவும் அப்பட்டமான முறையில் நேருக்கு எதிர்மாறாக உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியினை அவருடைய முகநூலில் பதிவிட்டு எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

இதன் உண்மைத் தன்மையினை சிலர் அறியாமல் அதற்கு கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். ஆகவே இதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ள என்னை நேரடியாக சந்தித்தோ அல்லது அன்றைய சபை அமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களின் ஓடியோ, வீடியோக்களை பார்வையிட்டோ இதன் உண்மைத் தன்மையினையும் தெளிவினையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

இவ்வாறு ஒரு மனிதர் மீது தனிப்பட்ட முறையில் அரசியல் இலாபங்களுக்காக சேறுபூசுவதை விடுத்து அல்லாஹ்வுக்கும் மறுமை நாளுக்கும் அச்சகோதரரை பயந்து நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இப்படியான காரியங்களை செய்து ஒரு தொழிலைப்பெற முயற்சிப்பதை விட வேறு தொழிலைச் செய்யலாம்.

எஸ்.ஏ. அன்வர் - ஆசிரியர்,
பிரதேச சபை உறுப்பினர்,
கோறளைப்பற்று மேற்கு,
ஓட்டமாவடி.

இதனுடன் தொடர்புடைய செய்திக்கு
http://www.newsview.lk/2018/09/blog-post_990.html

No comments:

Post a Comment