முச்சக்கர வண்டி சாரதிகள் மோதல் : ஒருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 29, 2018

முச்சக்கர வண்டி சாரதிகள் மோதல் : ஒருவர் உயிரிழப்பு

கொஹுவலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து ஒரு சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (29) காலை 10 மணியளவில் நுகேகொட திசையில் இருந்து கொஹுவலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் கொஹுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment