‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 1, 2018

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (01)புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய 6000 கோடி ரூபாய் முதலீட்டில் ‘எழுச்சிபெறும் பொலன்றுவை’ செயற்திட்டத்தின் கீழ் 180 வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வின் ஒரு அங்கமாக சேவா கம்மான கிராமத்திற்கு நீர் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 
இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன் மற்றும் ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 

No comments:

Post a Comment