ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டத்தினை புதன்கிழமை இன்று (01) நாச்சியாதீவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், திறப்பனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் வேட்பாளருமான சகோதரர் ஏ.ஏ.எம்.ரஸ்கான் செயற்படுத்தினார்.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி என்.எம்.மஹ்சூக்,அல் -ஹிக்கம் அரபிக்கல்லூரி அதிபர் கே.எம்.பைரூஸ் ஹாபிஸ், மற்றுமொரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எம்.நஸார்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாச்சியாதீவு வட்டார செயற்குழுவின் செயலாளர் என்.எல்.எம்.ஹாரிஸ், தானாதிகாரி எச்.நிஹ்மத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் திறப்பனை பிரதேச சபை முன்னாள் வேட்பாளர் ஜே.சவாஹிர், கட்சியின் ஆதரவாளர் ஷரீப்தீன் செயற்குழு உறுப்பினர் சி.ஹாமிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment