கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் முடிவடையும் வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பஸ் சேவையில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011 7555555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யமுடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment