பல தடவைகள் மழை பெய்யும் - இன்று இரவில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, August 5, 2018

demo-image

பல தடவைகள் மழை பெய்யும் - இன்று இரவில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கும்

1533518727-various-weather-2
இன்று இரவில் இருந்து, அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக நாட்டுக்கு தென்கிழக்காகவும் வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது. 

இதேவேளை, புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது. 

வளிமண்டளவியல் திணைக்களம்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *