முஸ்லிம் பெண்களின் பரிந்துரைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினை சீர்திருத்துவது தொடர்பான கோரிக்கையினை முன்வைத்து மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று புதன்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினை சீர்திருத்துவதன் மூலமே முஸ்லிம் பெண்களும் சிறுமியர்களும் தினமும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினை கருத்தில் கொள்ளப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 30 வருடகாலமாக இந்த திருத்ததினை கொண்டுவருவதற்கு முஸ்லிம் பெண்கள் குரல்கொடுத்து வருவதாகவும் ஆனால் அதனை அரசாங்கம் கருத்தில் கொள்ளாத நிலையே இருந்து வருவதாகவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
இலங்கை பெண்களிடையே பாரபட்சம் வேண்டாம் மட்டக்களப்பில் சிறுமிகளின் உரிமையை பாதுகாப்போம் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டு வருவோம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment